Wednesday, February 3, 2010

மாணவர் பயிற்சிக்கான கட்டுரைத் தலைப்புகள்

கட்டளை: இத்தாளில் A, B என்ற இரண்டு பிரிவுகள் உள்ளன. A பிரிவில் உள்ள கட்டுரையை அவசியம் எழுத வேண்டும். B பிரிவில் உள்ள தலைப்புகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுத வேண்டும்.



Bahagian A:
அருகில் உள்ள பதாகையைப் பார்த்து 180 சொற்களுக்குக் குறையாமல் ஒரு கட்டுரை எழுது









Bahagian B: பின்வரும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றைப் பற்றி 120 சொற்களுக்குக் குறையாமல் கட்டுரை எழுதுக.

1.    உங்கள் சீருடை இயக்கத்தோடு சேர்ந்து ஓர் உல்லாச வனத்திற்கு முகாமிடச் சென்றுள்ளீர்கள். அங்கு உங்களுக்கு ஒரு விநோதமான அனுபவம் ஏற்பட்டுள்ளது. அந்த அனுபவத்தை எழுதவும். (குறிப்பு - விநோதம் என்பது வேறு, பயங்கரம் என்பது வேறு. இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொண்டு மாணவர்கள் கட்டுரை எழுத வேண்டும்.)

2.    நமது நாட்டில் பெருகி வரும் போக்கு வரத்து நெரிசல் பிரச்சனையைத் குறைப்பதற்கு என்ன செய்யலாம் என்று உன் ஆலோசனையை எழுது.


3.    இந்திய மாணவர்கள் தங்கள் தாய்மொழியான தமிழைப் புரக்கணிப்பதற்கான காரணத்தையும் அவற்றைப் போக்குவதற்கான வழிவகைகளையும் விவரித்து எழுது.

4.    ஒரு தேசியப் பள்ளியில் பயின்று 5 ஏ பெறுவதை விட தமிழ்ப் பள்ளியில் பயின்று எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெறுவது இந்திய மாணவர்களுக்கம் சமுதாயத்திற்கும் மிகுந்த பலனைத் தரும். இந்தக் கூற்று தொடர்பாக உனது கருத்தை எழுதுக.






கட்டளை: இத்தாளில் A, B என்ற இரண்டு பிரிவுகள் உள்ளன. A பிரிவில் உள்ள கட்டுரையை அவசியம் எழுத வேண்டும். B பிரிவில் உள்ள தலைப்புகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுத வேண்டும்.

Bahagian A:
கீழே கொடுக்கப்பட்ட பதாகையைப் பார்த்து 180 சொற்களுக்குக் குறையாமல் ஒரு கட்டுரை எழுது


Bahagian B:
பின்வரும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றைப் பற்றி 120 சொற்களுக்குக் குறையாமல் கட்டுரை எழுதுக.

1.    ஒரு நாள் பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, நீயும் உன் தம்பியும், இன்னொருவருக்குச் சொந்தமான பழத்தோட்டத்தில் அத்துமீறி நுழைந்து பழங்களைத் திருடித் தின்று விட்டீர்கள். அதைப் பார்த்து விட்டத் தோட்டத்தின் உரிமையாளர் உங்களைக் கையும் களவுமாகப் பிடிக்கத் துறத்துகிறார். தலை தெறிக்க ஓடி அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறீர்கள். அந்த அனுபவத்தை எழுது.

2.    தகவல் தொடர்பு நுட்பம் மக்களுக்குப் பல நன்மைகளைக் கொண்டு வருகின்றது. அவற்றில் ஒன்று இணைய வசதி ஆகும். நன்மைகளுக்கு மத்தியில் பல தீமைகளும் அதில் உள்ளன. வாலிபப் பிராயத்தில் உள்ள மாணவர்களுக்கு இதனால் ஏற்படும் கெடுதிகளை எழுதுக.
3.    சண்டை! அதுதான் இன்றைய பிரச்னை! குடும்பத்தில் தொடங்கி உலக நாடுகளின் மனிதர்கள் பல காரணத்திற்காக சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அடிப்படையின் மனித உள்ளத்தில் அன்பு இல்லை. இந்த அன்பை வலியுறுத்தி வள்ளுவர் பல குறள்களை எழுதியுள்ளார். அதில் உனக்குப் பிடித்தமான ஒன்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு கட்டுரை எழுது. உன் கட்டுரையில் குறள், விளக்கம், உதாரணம் உட்பட இன்றைய உலக நடப்புகளையும் தொடர்புப் படுத்தி எழுத வேண்டும்.   




கட்டளை: இத்தாளில் A, B என்ற இரண்டு பிரிவுகள் உள்ளன. A பிரிவில் உள்ள கட்டுரையை அவசியம் எழுத வேண்டும். B பிரிவில் உள்ள தலைப்புகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுத வேண்டும்.

Bahagian A:
கீழே கொடுக்கப்பட்ட தொடர்படத்தைப் பார்த்து 180 சொற்களுக்குக் குறையாமல் ஒரு கட்டுரை எழுது.


பூF˜ழூ£ப் டூப்ஹCத்ஜ்ஆச் கூஆக்ஞஹ் ளட்£டஹஒ ரூட ண்£ங்ம்¡ அண்Ÿளழூ£ஞூபஹ் ழூஈவ் தூஆய்ஸ்ங


Bahagian B:
பின்வரும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றைப் பற்றி 120 சொற்களுக்குக் குறையாமல் கட்டுரை எழுதுக.

1.    பன்றி சளிக் காய்ச்சல் ஒரு அபாயகரமான தொற்று நோய் ஆகும். அது பரவும் விதம், நோய்க்கான அறிகுறிகள், தடுப்பு முறைகள் உட்பட மற்ற தொடர்புடைய தகவல்களையும் தொகுத்து ஒரு கட்டுரை எழுதுக.

2.    இன்னா செய்த ஒருத்தலை - அவர்நான நன்னயம் செய்து விடல் என்று வள்ளுவர் வலியுறுத்தியிருக்கிறார். ஆனால் நமது பள்ளி மாணவர்கள் குற்றம் செய்பவனை மன்னித்து விடாமல், வீதிச் சண்டைக்குச் செல்கிறார்கள். வள்ளுவரின் குறளையும் அதன் பொருளையும் எழுதுவதோடு, நமது மாணவர்களின் நெறி கெட்ட செயல்களையும் விமர்சித்து எழுதுக.

3.    உன் தந்தையோடு ஒரு கணினி விற்பனை மையத்திற்குச் செல்கிறாய். ஒரு மடிக் கணினி வாங்குவதற்காக உன் தந்தை விற்பனையாளருடன் மேற்கொள்ளும் உரையாடலை நேர் உரை (dialog) பாணியில் எழுதுக.

4.    பள்ளிகளுக்கு வழங்கப்படும் நீண்ட விடுமுறை மாணவர்களுக்கு பெரும் நஷ்டத்தையே விளைவிக்கிறது. இதன் அடிப்படையில் ஒரு வாதக் கட்டுரை எழுதுக.

No comments:

Post a Comment