(நான் செம்பருத்தி என்ற அகப்பக்கத்தில் பதிகின்ற கருத்து பெரும்பாலும் மறுக்கப்படுவதால், இங்கேயும் பதிவு செய்கிறேன்)
Think
out of the box – கைப்பேசிகளும் இதர மின் சாதனங்களும் கொண்டு வருகிற சீர்கேடுகளை மட்டும்
பார்க்கும் நாம் அதன் பயன்களைப் பார்க்காமல் இருப்பது வேதனையே!
இன்றைய மாணவர்களுக்குக்
கல்வியில் ஆர்வம் இல்லை என்பதற்கு ஆதாரணமாகப் பின்வரும் படத்தைப் பார்த்துப் புரிந்து
கொள்ளலாம் - http://www.facebook.com/photo.php?fbid=498705973478998&set=a.171684932847772.49098.100000187980670&type=1&theater
இந்த மாணவனின் புத்தகப் பையில் ஒரு புத்தகமும் எந்தவிதமான
எழுது உபகரணமும் இல்லை. இவனைப் போன்று பல ஆயிரம் மாணவர்கள் இருக்கின்றனர். இவர்களைப்
போன்றோர் கல்வியில் ஆர்வம் காட்ட மாற்று வழி ஆராயப்பட வேண்டியிருக்கிறது.
‘நாங்கள்
பயிலும் போது வீட்டு அலைபேசிகளைக் கூட கண்டதில்லை. நாங்களும் நன்றாகப் படித்து முன்னேறியிருக்கிறோமே?’
– இது பழைமை வாதம். இதற்கு என் சொந்த அனுபவத்தைக் கூற விரும்புகிறேன்.
நான் ஆரம்பப்
பள்ளியில் யுபிஎஸ்ஆர் தமிழ்ப் பாடம் போதித்து வந்தேன். அவர்களுக்காக ஏராளமான கேள்வித்
தாள்கள் தயாரிக்க வேண்டியிருந்த்து. எனவே, ஆசிரியர் மீட்டிங் போது ஒரு தமிழ் டைப்ரைட்டர்
வாங்கி வைக்கச் சொன்னேன். அதற்கு அந்தத் தலைமையாசிரியர் என்ன சொன்னார் தெரியுமா?
‘நாங்கள்
எல்லாம் அந்தக் காலத்தில் ஸ்டென்சிலில் கையால்தான் எழுதுவோம். நீங்கள் என்ன டைப்ரைட்டர்
கேட்கிறீர்கள்?’ – இப்படிப் பட்ட பழைமைவாதத் தலைமையாசிரியர்களைத் திருத்த முடியாது
என்பதை உணர்ந்து, நானே இந்தியாவில் இருந்து ஒரு தமிழ் டைப்ரைட்டரை வரவழைத்து எல்லா
கேள்வித் தாள்களையும் டைப் செய்து தரமாக மாணவர்களுக்கு வழங்கினேன்.
ஒரு சில வருடங்களில்
பள்ளிகளில் கணினி பிரவேசிக்கத் தொடங்கியது. கணினி தமிழ்க் கல்வியைச் செம்மைப் படுத்தும்
சிறந்த உபகரணமாகத் திகழும் என்பதை உணர்ந்த நான் ஆசிரியர்களும் கணினியைப் பயன்படுத்த
ஏற்பாடு செய்யுமாறு ஆசிரியர்கள் மீட்டிங்கில் கேட்டுக் கொண்டேன். மீண்டும் தலைமையாசிரியர்
பழைமைவாத வசனங்களைப் புலம்ப ஆரம்பித்தார். அவரும் பள்ளியில் சகுணிகளாகச் செயல்பட்ட
சில மூத்த ஆசிரியர்களின் வசனங்களை இங்கே எழுதுகிறேன்.
தலைமையாசிரியர்
– கணினி நிர்வாகத்திற்கு மட்டும்தான். (மலாய்கார கிராணி மட்டும் பயன்படுத்த முடியும்)
துணைத் தலைமையாசிரியர்
1 – ஜான்சன் என்ன game விளையாடுவதற்காக கணினி வாங்கியிருக்கிறாரா? (நான் சொந்தமாக கணினி
வாங்கிய பிறகு. . . .)
துணைத் தலைமையாசிரியர்
2 – நீங்கள் கணினி படித்திருக்கிறீர்கள் என்பதற்கு சான்றிதழ் இருக்கிறதா? (மிகவும்
ஆத்திரத்துடன். . . . PPD அனுப்பிய ஒரு survey பாரத்தில் அவர் மட்டும் கணினியில் ஜாம்பவன்
என்ற வகையில் தன் பெயரை எழுதிக் கொண்டார். எனக்கும் கணினி அறிவு இருக்கிறது என்று சொன்ன
போது, அற்ப புத்தி கொண்ட அந்த துணைத் தலைமையாசிரியர் அப்படி என்னிடம் எகிறினார்).
கிராணி –
Jangan sentuh Johnson! Nanti rosak. . . . (புதிதாக வந்தக் கணினியை நான் இயக்க முற்பட்ட
போது. பேசிய வசனம் இது)
இப்படிப்
பட்ட பழைமைவாத காலணியின் மத்தியில் பணி புரிந்த நான், இவர்கள் சமுதாயத்தின் வைரஸ்கள்
என்பதை உணர்ந்தவனாய் கணினி வாங்கும் கடன் பாரத்தை நிரப்பி PPD-இல் கொடுத்தேன். அங்கே
அதற்குச் சம்பந்தப் பட்ட அதிகாரி அதனை அப்படியே குப்பையில் போட்டு விட்டார் போலும்.
பதிலே வரவில்லை. ஆனால், எனக்கு முன்னதாக மனு செய்த பள்ளியின் கிராணிக்கு (மலாய்க் காரன்)
அந்தக் கடன் கிடைத்தது இன்னொரு வேடிக்கையான வேதனை. (அந்த பிபிடி அதிகாரி மோசடி குற்றச்சாட்டில்
இன்னும் தண்டனை அனுபதித்து வருகிறார். அப்படிதான் வேணும். . .)
Jangan
sentuh Johnson, nanti rosak என்று கட்டளையிட்ட கிராணியோ, கணினித் திரையில் ஒன்றும்
தோன்றவில்லை என்பதால் பதறிப் போனான். என்னென்னவோ செய்து பார்த்தான். முன்பு குறிப்பிட்ட
ஜாம்பவானும் வந்து பார்த்தார். ஒன்றும் முடியவில்லை. கடைசியில் என்னைக் கூப்பிட்டார்கள்.
கணினி மோனிட்டரின் கீழ் உள்ள சில புத்தான்களைத் திருகி விட்டேன். திரைக் காட்சி தென்பட்டது.
எனவே, வேறு
வழி இல்லாமல் Bank Rakyat-இல் கடன் வாங்கி ஒரு கணினி வாங்கினேன். அப்போதுள்ள நிலைமையில்
அதற்கு 6,000 ரிங்கிட் தேவைப்பட்டது. தமிழ் செயலியான முரசு என்ற மென்பொருளுக்கு மட்டும்
1,200 ரிங்கிட் வழங்கினேன்.
இப்படி ஓர்
ஆசிரியர் மாணவர் நலனுக்காகவும் பள்ளி நலனுக்காகவும் சொந்தப் பெயரில் கடன் வாங்கி செலவழித்த
காலம் ஒன்று இருந்தது.
‘நாங்கள்
எல்லாம் ஸ்டென்சிலில் கையால் எழுதினோம்’ என்று பழைமைவாதம் பேசிய தலைமையாசிரியர் தன்
பிள்ளைகளை ஒரு ‘தரமான’ மலாய்ப் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தார். அதைவிட மோசமான காரியம்
ஒன்று உண்டு. அவர் ஜம் என்று தோயோத்தா கொரோனா காரில்தான் பள்ளிக்கு வருவார். அவர் ஆசிரியராக
பணியாற்றிய காலத்தில் தமிழ்ப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கூட கூட ஹோண்டா சி70 மோட்டார்
சைக்கிளில்தான் வருவார்கள் என்று கூறி அவர் மூக்கை உடைத்திருக்க வேண்டும். ஆனால், அப்படிப்
பேசாமல் செய்கையில் தான் மூக்கறுத்துவிட்டேன்.
நான் கணினியில்
ஆவணங்களைத் தயாரித்து மாணவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கிய பிறகு என்ன நடந்த்து?
தலைமையாசிரியர்
பள்ளியின் ஆவணங்களை என்னிடம் கொடுத்து அடிக்கச் சொல்வார். நானும் வேலையைச் செய்து கொடுத்து
விட்டு ஒரு பில் போட்டு அனுப்புவேன். ‘ஸ்கூர் வேலைக்கு ஏன் பில் போடுகிறீர்கள்’ என்று
கேட்பார். நிர்வாகப் பணிகளைச் செய்வதற்குக் கிராணியும் பள்ளி கணினியும் இருக்கும் போது,
நான் என் சொந்தக் கடனில் வாங்கிய கணினியில் இலவசமாக செய்து கொடுக்க முடியுமா?
பிறகு துணைத்
தலைமையாசிரியர் (1) புக் லிஸ்ட் டைப் செய்து தரச் சொல்வார். நானும், கேம் விளையாடுவதற்குதான்
கம்பூட்டர் வாங்கி வைத்திருக்கிறேன் என்று சொல்வேன்.
அப்புறம்
இரண்டாவது துணைத் தலைமையாசிரியர் கதை இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது. நான் தமிழிலேயே
அழகழகான பேனர்களைச் செய்து பள்ளியில் ஒட்டி வைப்பேன். இந்த வேலைகளை வீட்டிலேயே செய்து
எடுத்து வருவேன். இதைக் கண்ட அந்த து.த.ஆசிரியர் தானும் செய்ய முடியும் என்ற தோரணையில்
பள்ளியின் கணினியில் உட்காருவார். காலை 7.30க்குத் தொடங்கிய வேலை நண்பகல் 1.30 ஆனாலும்
முடியாது. மணி அடித்தவுடன் பள்ளி நேரம் முடிந்தது என்று வேறு வேலையில் பணம் சம்பாதிக்கப்
பறந்து விடுவார். இடைப்பட்ட நேரத்தில் பாடம் நடைபெறாது. மாணவர்கள் ‘அம்போ’ என்று காத்துக்
கொண்டிருப்பார்கள்.
இந்தப் பிற்போக்குச்
சிந்தனைகளை நீட்டி எழுதுவதற்குக் காரணம் உண்டு.
மாணவர்கள்
கைப்பேசிகள், ஐபெட், ஐபோட் போன்ற மின்னியல் சாதனங்களைக் கொண்டு வருவதை ஆட்சேபிக்கும்
நாம் அதன் மூலம் கற்றல் – கற்பித்தலை மட்டுமல்லாமல், கட்டொழுங்கு, தவணை சோதனை போன்றவற்றைச்
செம்மையாக நடத்த முடியும் என்பதை மறந்து விடுகிறோம். இது ஒரு வகை அறியாமைதான். அது
மட்டுமல்லாமல் அரசாங்கம் இலவச பாட புத்தகத்திற்காக செலவு செய்யும் பணத்தைக் கூட மிச்சப்படுத்தலாம்.
மாணவர்கள்
ponteng அடிப்பதையும் தவிர்க்கலாம் என்பதைச் சொன்னால் கூட நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
Bluetooth போன்ற சாதனங்கள் மூலம் வகுப்பில் இல்லாத மாணவர் யார் என்று அடையாளம் கண்டு,
அவர்களின் பெயர்களை Disiplin Board-க்கு அனுப்பி விடலாம். அத்தோடு அதிநவீன கருவிகள்
பொறுத்தப் பட்டால், அந்த மாணவர்கள் பள்ளிக்கு வெளியே எங்க சுற்றித் திரிகிறார்கள் என்பதைக்
கூட அறிந்து விடலாம். கல்வியில் அக்கறை இல்லாவிட்டாலும் குறைந்தது அச்சத்தின் காரணமாக
மாணவர்கள் ponteng அடிப்பதைத் தவிர்ப்பார்கள்.
பாட புத்தகமா?
– அது மின்னியல் புத்தகமாக இருக்கட்டும். பயிற்சி புத்தகமா? – மாணவர்கள் மின்னியல்
முறையிலேயே பயிற்சிகள் செய்யட்டும். தவணை சோதனையா? – அதையும் ஆசிரியர்கள் மின்னியல்
முறையிலேயே நடத்தட்டும். இப்படி மின்னியல் முறையில் சோதனை நடத்தப்பட்டால் ஆசிரியர்களுக்கு
நூற்றுக் கணக்கான தாள்களைத் திருத்தும் சுமையும் இயல்பாகவே குறைந்து விடும். Rujukan
செய்வதற்குக் கூட மாணவர்கள் தங்கள் ஐ-போன், ஐ-பேட், ஐ-போட், NetBook போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
இது எவ்வளவு அணுகூலமானது என்று யோசித்துப் பாருங்கள்.
ஓர் ஆசிரியர்
மின்னியல் சாதனங்களைத் தம் கற்றல் கற்பித்தலுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கு
www.mysemekar.blogspot.com என்ற
எனது வலைப்பூவிற்கு வலம் வருமாறு கேட்டுக் கொள்கிறேன். மாணவர்கள், தங்கள் குற்றங்கள்
இந்த வலைப்பூவில் பதிவு செய்யப்படுகின்றன என்பதை அறிந்து தங்கள் தவறுகளை வெகுவாகக்
குறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மின்னியல்
சாதனங்கள் தீமைகளையும் கொண்டு வரும் என்பது மறுப்பதற்கில்லை. இவற்றைச் சமாளிக்க மாற்று
வழிகள் ஆராயப்பட வேண்டும். உதாரணமாக பாட நேரத்தில் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்திருக்கும்போது
கைப்பேசி அலறி இடையூறு விளைவிக்கலாம். இதற்கு எனது ஆலோசனை என்னவென்றால் பள்ளி வளாகத்திற்குள்
சிக்னல் வருவதைத் தடைசெய்யலாம். இந்த அணுகு முறை செலயாங் மருத்துவமனையிலும் இதர பாதுகாப்பு
பொருந்திய இடங்களிலும் அணுசரிக்கப்படுகிறது. அதே போல் ஒவ்வொரு பிர்ச்சனைகளை கையாள்வதற்கு
அணுகுமுறையைத் தேட வேண்டுமே ஒழியே, அதற்குத் தடை விதிப்பது நமது எதிர்காலத் தலைமுறையினர்
உலக சவால்களை எதிர்நோக்கும் சக்திகளைக் குன்றச் செய்யும் என்பதை உணர வேண்டும்.
மட்டுமன்றி,
என்னதான் சட்டம் விதித்தாலும் மாணவர்கள் கைப்பேசியைக் கொண்டு வருவது தடுக்கப்பட முடியாத
காரியம் என்பதை உணர வேண்டும். எங்கள் பள்ளியில் பல மாணவர்கள் கைப்பேசி கொண்டு வருகிறார்கள்.
என் பிள்ளைகள் கூட என் கட்டளைளை மீறி கைப்பேசியைப் பள்ளிக்கு எடுத்துச் செல்கிறார்கள்.
எனவே, கிணற்றுத்
தவளை போல் சிந்திக்காமல் think out of the box என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.